சின்னங்சிறு வயதில்
அப்பாவிடம் எதை எதை-யோ சொல்லி
காசு வாங்கி
கட்டு கட்டாக இருக்கும்
வாழ்த்து அட்டைகளை
அலசி எடுத்து
எடுத்த பல வாழ்த்து அட்டைகளை
மனக்கணக்கில்
பண பற்றாக்குறையை அறிந்து
மனசில்லாமல் சிலவற்றை விடுத்து
நண்பர்களையும் உறவினர்களையும்
வரிசை படுத்தி
ஒட்டிய தபால் தலைகலை
சரி பார்க்கிறேன் பேர்வழி என்று
கிழித்து ஒட்டி
பலமுறை பரிசோதித்து
அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டைகள்
எங்க போயின எப்போது?
Saturday, January 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்ன தலைவா இப்ப எல்லாம் அடிக்கடி கவிதை எழுதுறது இல்லை போல ......
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment